2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று : செப்டெம்பர் 17

Editorial   / 2018 செப்டெம்பர் 17 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1900 : பிலிப்பைன் - அமெரிக்கப் போர்: மாபிட்டாக் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிலிப்பீனியப் படைகள் அமெரிக்கரைத் தோற்கடித்தன.

1908 : ரைட் சகோதரரினால் செலுத்தப்பட்ட வானூர்தி தரையில் மோதியதில் தோமசு செல்பிரிட்ச் என்பவர் உயிரிழந்தார். விமான விபத்தில் உயிரிழந்த முதலாவது மனிதர் இவராவார்.

1928 : சூறாவளி ஒக்கீச்சோபீ தென்கிழக்கு புளோரிடாவைத் தாக்கியதில் 2,500 பேர் உயிரிழந்தனர்.

1930 : குர்தியரின் அரராத் கிளர்ச்சியை துருக்கி முறியடித்தது.

1939 : இரண்டாம் உலகப் போர் - சோவியத் ஒன்றியத்தின் போலந்து படையெடுப்பு ஆரம்பமானது.

1939 : இரண்டாம் உலகப் போர் - பிரித்தானிய வானூர்தி தாங்கிக் கப்பல் ஒன்று நாட்சி ஜேர்மனியின் நீர்மூழ்கியால் தாக்கி அழிக்கப்பட்டது.

1941 : இரண்டாம் உலகப் போர்  - சோவியத் ஒன்றியத்தில் கட்டாய இராணுவப் பயிற்சி மீண்டும் அமுல்படுத்தப்பட்டது.

1941 : ஈரான் மீதான ஆங்கில - சோவியத் படையெடுப்பு - சோவியத் படைகள் தெகுரான் நகருள் நுழைந்தன.

1944 : மார்க்கெட் கார்டன் நடவடிக்கை - நேசப் படைகளின் வான்படையினர் வான்குடைகள் மூலம் நெதர்லாந்தில் தரையிறங்கின.

1944 :  இரண்டாம் உலகப் போர் - நாட்சி ஜேர்மனிப் படைகள் சான் மரீனோ போரில் நேசப் படைகளால் தாக்கப்பட்டனர்.

1948 : ஐதராபாத் நிசாம் மரபினர் ஐதராபாத் இராச்சியம் மீதான தமது இறைமையைக் கைவிட்டு இந்திய ஒன்றியத்தில் இணைந்தனர்.

1949 : டொரோண்டோ துறைமுகத்தில் நொரோனிக் என்ற கனேடியக் கப்பல் எரிந்ததில் 118 பேர் உயிரிழந்தனர்.

1965 : பாக்கிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் சவிண்டா என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.

1974 : வங்காளதேசம், கிரெனடா,  கினி-பிசாவு ஆகியன ஐநாவில் இணைந்தன.

1976 : நாசா தனது முதலாவது மீள் விண்ணோடமான எண்டர்பிறைசசு பற்றிய தகவல்களை வெளியிட்டது.

1978 : இஸ்ரேலுக்கும் எகிப்துக்கும் இடையில் கேம்ப் டேவிட் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

1980 : போலந்தில் சொலிடாரிட்டி தொழிற்சங்கம் உருவாக்கப்பட்டது.

1980 : நிக்கராகுவாவின் முன்னாள் அரசுத்தலைவர் அனாஸ்தாசியோ டெபாயில் பரகுவையில் படுகொலை செய்யப்பட்டார்.

1988 : தென் கொரியாவின் சியோல் நகரில் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாயின.

1991 : எசுத்தோனியா, வட கொரியா, தென் கொரியா, லாத்வியா, லித்துவேனியா, மார்சல் தீவுகள் மைக்குரோனீசியா ஆகியன ஐநாவில் இணைந்தன.

1991 : லினக்ஸ் இயங்குதளம் (0.01) இணையத்தில் கிடைத்தது.

1997 : பெரியார் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

2004 : இந்தியாவில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.

2011 : வோல் வீதி ஆக்கிரமிப்பு இயக்கம் நியூயார்கில் ஆரம்பமானது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .