2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று; மார்ச் 02

Editorial   / 2020 மார்ச் 02 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிகழ்வுகள்

986 – பிரான்சின் மன்னனாக ஐந்தாம் லூயி முடிசூடினான்.

1807 – அடிமைகளை நாட்டுக்குள் கொண்டு வருவதை தடை செய்யும் சட்டமூலம் அமெரிக்க காங்கிரசில் கொண்டுவரப்பட்டது.

1815 – கண்டி ஒப்பந்தம் என வழங்கப்படும் ஒப்பந்தத்தின் மூலம் கண்டி இராச்சியம் பிரித்தானியருக்குக் கொடுக்கப்பட்டது. சிறை பிடிக்கப்பட்ட ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் என்ற கண்ணுச்சாமி தென்னிந்தியாவில் உள்ள வேலூர்க் கோட்டைக்கு அனுப்பப்பட்டான்.

1823 – தமிழ் நாடு, ஸ்ரீபெரும்புதூரில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

1836 – டெக்சாஸ் குடியரசு மெக்சிக்கோவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1855 – இரண்டாம் அலெக்சாண்டர் ரஷ்யாவின் சார் மன்ன்னாக முடிசூடினான்.

1896 – எதியோப்பியா ஆட்வா என்ற இடத்தில் வைத்து இத்தாலியைத் தோற்கடித்தது. ஓர் ஆபிரிக்க நாடொன்றினால் காலனித்துவ நாடொன்றின் படைகள் தோற்கடிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

1917 – புவேர்ட்டோ ரிக்கன்களுக்கு ஐக்கிய அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்பட்டது.

1919 – அனைத்துல கம்யூனிஸ்ட்டுகள் முதற்தடவையாக மாஸ்கோவில் கூடினர்.

1930 – மகாத்மா காந்தி உப்புச் சத்தியாக்கிரகம் ஆரம்பிப்பதற்காக அகமதாபாத்திலிருந்து குஜராத் கடலோரத்தில் இருந்த தண்டி நோக்கி 240 மைல் நடைப் பயணத்தை துவக்கினார்.

1935 – சியாம் மன்னர் பிரஜாதிபோக் (ஏழாவது ராமா) முடி துறந்ததையடுத்து அவரது 9-வயது மருமகன் ஆனந்த மஹிதோல் (எட்டாவது ராமா) மன்னரானார்.

1941 – இரண்டாம் உலகப் போர்: முதலாவது ஜேர்மனியப் படைகள் பல்கேரியாவினுள் நுழைந்தனர்.

1943 – இரண்டாம் உலகப் போர்: பிஸ்மார்க் கடல் சமரின் போது அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலியப் படைகள் ஜப்பானியக் கப்பல்களை தாக்கி மூழ்கடித்தன.

1946 – ஹோ சி மின் வட வியட்நாமின் அதிபரானார்.

1956 – மொரோக்கோ பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1958 – தி.மு.க. மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது.

1962 – பர்மாவில் இராணுவ ஜெனரல் நெ வின் (Ne Win) இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார்.

1970 – ரொடீசியா பிரித்தானியாவிடம் இருந்த பிணைப்பைத் துண்டித்து தன்னைக் குடியரசாக அறிவித்தது.

1972 – நாசாவின் பயனியர் 10 விண்கலம் வெளிக் கோள்களை ஆராய்வதற்காக புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது.

1991 – இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன தொலைவில் இருந்து இயக்கிய கார் குண்டு ஒன்றின் மூலம் கொலை செய்யப்பட்டார்.

1990 – ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவராக நெல்சன் மண்டேலா தெரிவு செய்யப்பட்டார்.

1992 – உஸ்பெக்கிஸ்தான், மல்தோவா ஆகியன ஐநாவில் ணைந்தன.

1995 – யாஹூ! தொடங்கப்பட்டது.

1998 – ஜூப்பிட்டரின் சந்திரனான “யூரோப்பா”வில் அடர்ந்த பனிக்கட்டியின் கீழ் திரவநிலையில் கடல் இருப்பதாக கலிலியோ விண்கலம் தகவல் அனுப்பியது.

2002 – ஆப்கானிஸ்தான் மீதான ஐக்கிய அமெரிக்காவின் அனகோண்டா தாக்குதல் ஆரம்பமாகியது.

பிறப்புக்கள்

1896 – ரா. பி. சேதுப்பிள்ளை, தமிழறிஞர் (இ. 1961)

1918 – ரஞ்சன், திரைப்பட நடிகர் (இ. 1983)

1923 – சுந்தரிபாய், நகைச்சுவை நடிகை

1931 – மிக்கைல் கொர்பசோவ், சோவியத் ஒன்றிய முன்னாள் தலைவர்

1935 – குன்னக்குடி வைத்தியநாதன், வயலின் இசைக்கலைஞர் (இ. 2008)

இறப்புக்கள்

1791 – ஜோன் வெஸ்லி, மெதடிஸ்தத்தை அறிமுகம் செய்தவர். (பி. 1703)

1930 – டி. எச். லோறன்ஸ், ஆங்கில எழுத்தாளர் (பி. 1885)

1949 – சரோஜினி நாயுடு, இந்திய சுதந்திரப் போராட்ட வீராங்கனை, கவிக்குயில் (பி. 1879)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .