2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று: ஒக்டோபர் 05

Super User   / 2011 ஒக்டோபர் 04 , பி.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

1582: பாப்பரசர் 13 ஆம் கிறகரி, கிறகரியன் கலண்டரை அமுல்படுத்தியதால் அதை பின்பற்றிய இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயன் ஆகிய நாடுகளில்  ஒக்டோபர் 4 ஆம் திகதிக்குப்பின் மறுநாள் ஒக்டோபர் 15 ஆம் திகதியாக மாற்றப்பட்டது. எனவே இந்நாடுகளில் 1582 ஆம் ஆண்டு ஒக்டோபர் 5 முதல் 14 வரையான திகதிகள் இருக்கவில்லை.

1789: பிரெஞ்சு புரட்சியின்போது, பாண் விலை குறைப்பு உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி 16 ஆம் லூயி மன்னனுக்கு எதிராக வேர்செய்ல்ஸ் அரண்மனையை நோக்கி பெண்கள் மாபெரும் பேரணியொன்றை ஆரம்பித்தனர்.

1864: கொல்கத்தா நகரில் சூறாவளியினால் பேரழிவு: 60,000 பேர் பலி.

1905: ரைட் சகோதரர்களில் ஒருவரான வில்பர் ரைட் தமது விமானத்தில் 39 நிமிடங்களில் 24 மைல்தூரம் பறந்தார். 1908 ஆம் ஆண்டுவரை அது உலக சாதனையாக இருந்தது.

1947: முதல்தடவையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வெள்ளை மாளிகை உரையை அமெரிக்க ஜனாதிபதி ஹரி ட்ரூமன் நிகழ்த்தினார்.

1948: சோவியத் யூனியனின் அஸ்காபாத்தில் (தற்போது துருக்மேனிஸ்தானின் பிராந்தியம்) இடம்பெற்ற பூகம்பத்தில் 111,000 பேர் பலி.

1962: முதலாவது ஜேம்ஸ்பான்ட் திரைப்படம் - டொக்டர் நோ- வெளியாகியது.

1994: சுவிட்ஸர்லாந்தில் மத அமைப்பொன்றைச் சேர்ந்த 48 பேர் கூட்டாக தற்கொலை.

2000: சேர்பியாவின் பெல்கிறேட் நகரில் ஜனாதிபதி ஸ்லோபோடன் மிலோசவிக்கை இராஜினாமாச் செய்யக்கோரி பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

2001: பத்திரிகையாளர் ரொபர்ட் ஸ்டீவன்ஸன் (63), அமெரிக்காவில் அந்ரெக்ஸ் தாக்குலில் பலியான முதல் நபரானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .