2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: ஓகஸ்ட் 18

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 17 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1201: லாத்வியாவின் ரீகா நகரம் அமைக்கப்பட்டது.

1868: பிரெஞ்சு வானியல் நிபுணர் பியேர் ஜான்சென் சூரிய கிரகணத்தை ஆராயும்போது ஹீலியம் என்ற தனிமத்தைக் கண்டுபிடித்தார்.

1877: செவ்வாய்க் கோளின் ஃபோபோஸ் துணைக்கோள் கண்டுபிடிக்கப்பட்டது.

1891: மார்டீனிக் தீவில் நிகழ்ந்த பெரும் சூறாவளியினால் 700 பேர் கொல்லப்பட்டனர்.

1917: கிறீசில் தெசலோனிக்கி என்னும் நகரில் இடம்பெற்ற தீவிபத்தில் நகரின் பெரும் பகுதி அழிந்தது. 70,000பேர் வீடுகளை இழந்தனர்.

1924: பிரான்ஸ் ஜெர்மனியில் இருந்து தனது படைகளைத் திரும்ப அழைக்க ஆரம்பித்தது.

1928: சென்னை மியூசிக் அகாதமி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது.

1938: நியூயோர்க்கையும் கனடாவின் ஒண்டாரியோவையும் இணைக்கும் ஆயிரம் தீவுகள் பாலத்தை அமெரிக்க அதிபர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட் திறந்துவைத்தார்.

1950: பெல்ஜியம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஜூலியன் லாஹூட் படுகொலை செய்யப்பட்டார்.

1958: விளாடிமீர் நபகோவ் எழுதிய லொலிட்டா என்ற புதினம் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது.

1971: வியட்நாம் போர் - ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகியன தமது படைகளை திரும்ப அழைக்க முடிவு செய்தன.

1983: டெக்சாசைத் தாக்கிய அலீசியா என்ற சூறாவளியினால் 22பேர் கொல்லப்பட்டனர்.

2005: இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட மின்சார தடங்கல் காரணமாக சுமார் 10 கோடி மக்கள் பாதிக்கப்பட்டனர்.

2008: பாகிஸ்தான் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரவ், எதிர்கட்சிகளின் பாரிய ஆர்ப்பாட்டங்கள் காரணமாக ராஜினாமா செய்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .