2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: பெப்ரவரி 21

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 20 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1848: கார்ல் மார்க்ஸ், பிரெட்ரிக்ஸ் ஏங்கல்ஸ் ஆகியோர் 'கம்யூனிஸ விஞ்ஞாபனம்' எனும் நூலை வெளியிட்டனர்.

1878: உலகின் முதல் தெலைபேசி விபரக்கொத்து அமெரிக்காவின் கனெக்டிகட் மாநிலத்தில் வெளியிடப்பட்டது. 50 சந்தாதாரர்களின் விபரங்கள் அதில் அடங்கியிருந்தன.

1947: உடனடியாக புகைப் படங்களை வழங்கும் முதல் கமெராவை (இன்ஸ்டன்ட் கமெரா) நியூயோர்க்கில் எட்வின் லான்ட் என்பவர் செயற்படுத்திக்காட்டினார்.

1952: பிரிட்டனில் வின்ஸ்டன் சர்ச்சில் தலைமையிலான அரசாங்கம் அடையாள அட்டை சட்டத்தை நீக்கியது.

1952: கிழக்கு பாகிஸ்தானில் (தற்போதைய பங்களாதேஷ்) வங்காள மொழியை உத்தியோகபூர்வ மொழியாக அங்கீகரிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். பின்னர் இத்தினம் சர்வதேச தாய்மொழி தினமாக யுனெஸ்கோவினால் பிரகடனப்படுத்தப்பட்டது.

1953: பிரான்ஸிஸ் கிறிக், ஜேம்ஸ் டி வட்ஸன் ஆகியோர் டி.என்.ஏ. மூலக்கூறு கட்டமைப்பை கண்டுபிடித்தனர்.

1958: ஜெரால்ட் ஹோல்டம் என்பவரால் சமாதான சின்னம் உருவாக்கப்பட்டு, அணுவாயுத ஒழிப்பு பிரச்சாரங்களுக்கு பயன்படுத்தப்பட்டது.

1970: சுவிஸ் எயார் விமானம் சுவிட்ஸர்லாந்தில் விபத்துக்குள்ளானதால் 38 பேர் பலி.

1970: அமெரிக்க ஜனாதிபதி நிக்ஷன் சீனாவுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயமொன்றை மேற்கொண்டார்.

1973: லிபிய பயணிகள் விமானமொன்றை  சினாய் பாலைவனத்திற்கு மேலாக இஸ்ரேலிய போர் விமானமொன்று சுட்டுவீழ்த்தியதால் 108 பேர் பலி.

2004: ஐரோப்பாவின் முதலாவது அரசியல் கட்சியான ஐரோப்பிய பச்சை கட்சி ரோம் நகரில் உருவாக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .