2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

‘இவன் என்னவன், என் துன்பம் இவன் அறிவான்; எனைப் பிரியான்’

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

காதலன் எவ்வளவுதான் தன் காதலியுடன் அன்பு பாராட்டிப் புகழ்ந்தாலும் கூட, அவள் மனதில் மருட்சியும் பயமும் இழைந்தோடுவது இயற்கை. 

“ஆரம்பத்திலிருந்து இன்றுவரை இவன் என்னுடன் கேலியும் கிண்டலுமாய் சிலசமயங்களில் குறும்போடு கூடிய பொய்யுரையும் பகர்கின்றானே; எங்கே சில சமயம் என்னை மறந்து ஏகி விடுவானோ என அச்சமும் அடைகின்றேனே; இது எப்படி என் மனசை வதைக்கின்றதே என நெஞ்சம் கிலேசமடைகின்றது” 

மிக ஆழமான காதல் உருவாகினால் கூட, பெண்மைக்குரிய மென்மையினால் சிறிது அச்சம் ஏற்படினும், கூடவே இவன் என்னவன், என் துன்பம் இவன் அறிவான்; எனைப் பிரியான் என்று மனம் சிலிர்த்துத் தனது எண்ணத்தையிட்டு மனம் வருந்துவாள். காதல் வாழ்வில் இன்பமே என்றாலும், இதுபடுத்தும்பாடு, அனுபவித்தால்த்தான் புரியும். 

வாழ்வியல் தரிசனம் 20/12/2016

பருத்தியூர் பால – வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X