Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை
Princiya Dixci / 2016 மே 25 , மு.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்பொழுதும், மனசுக்குள் துன்பங்களை போற்றிப் பாதுகாத்து அல்லல்படுபவர்கள், தங்களுக்கு வெளியே மகிழ்ச்சி என்கிற மாவிருட்சங்கள் பல்கிப் படர்ந்துள்ளமையை உணரவேண்டும்.
குப்பைகளுடன் புரண்டு சதா தூங்குபவர்கள், பஞ்சணையில் படுக்கத் தயாராக இருப்பதில்லை.
சோர்வும் துன்பப்படுவதும், பழக்கதோஷமாக அமையக் கூடாது. இதிலிருந்து மீண்டுவர சித்தம் கொள்ளல் வேண்டும்.
நாளைய பொழுதுக்காக நல்லபடி வாழவேண்டுமென எண்ணினால் கஷ்டங்களை இஷ்டமுடன் பேசாமல் சட்டென எழுந்து விடுவான்.
எதனையும் உருவாக்காமல் பயன்களைப் பெற்றுக்கொள்ள முடியாது. அகத்தினூடாகவும் புறஉலகின் ரம்மியமூடாகவும் மகிழ்வை, மனிதன்தானே பெற்றுக்கொள்ளவேண்டும்.
வாழ்வியல் தரிசனம் 25/05/2016
-பருத்தியூர் பால வயிரவ நாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
8 hours ago