2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வாழ்வியல் தரிசனம் 15/03/2016

Princiya Dixci   / 2016 மார்ச் 15 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிகவும் பிரபல்யமானவர்களில் பலருக்கு, மற்றவர்களைப் பற்றியோ, அல்லது சின்னஞ்சிறு விடயங்களைக் கூட அறியநேரம் இல்லாமல் இருக்கின்றது. தங்களது கடமையிலேயே மூழ்கிப்போயுள்ளமையினால், புற உலக சமாசாரங்கள் புலப்படாமல் போவதுமுண்டு.

பழம் பெரும் பிரபல ஹிந்தி திரைப்பட நடிகர் திலீப் குமார் அவர்கள் விமானப் பயணத்தின்போது, தமது இருக்கையின் அருகே ஒருவருடன் சம்பாஷித்தார். அவரும் நட்புறவுடன் உரையாடினார்.

பயண இறுதியில் அந்நபர் 'நீங்கள் என்ன செய்கின்றீர்' என்று கேட்டார். அவரோ ஒன்றுமில்லை எனப் பதிலிறுத்துவிட்டு, 'அது சரி நீங்கள் என்ன செய்கின்றீர்' எனத் திருப்பிக் கேட்டார்.

அவரோ 'நான் டாட்டா நிறுவனத் தலைவர். எனது பல நிறுவனங்களை நடாத்தி வருகின்றேன்' என்றார். இருவருமே மிகப் பெரிய பிரபல்யங்கள். ஆனால், ஒருவரைப் பற்றி  ஒருவர் தெரியாமல் இருந்திருக்கிறார்கள். இருவருமே அமைதியானவர்கள்.

உழைப்புக் கூடியவர்களுக்கும் புற உலகம் காண நேரம் கிடைப்பதில்லை.

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .