2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கொத்துக்குளம் அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலய கொடியேற்றம்

Kanagaraj   / 2014 ஜூலை 03 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன்,தேவ அச்சுதன்


மட்டக்களப்பு கொத்துக்குளம் அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

விநாயக வழிபாடுகளுடன் யாகபூஜைகள் நடைபெற்று விசேட கும்ப பூஜைகள் நடைபெற்றதுடன் பிள்ளையாரடி புரவிப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து கொடிச்சீலை ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.

இதன்போது கொடிச்சீலைக்கு விசேட பூசைகள் நடைபெற்றதுடன் மூலமூர்த்தி மற்றும் பாரிபால மூர்த்திகளுக்கு விசேட அபிசேக பூசைகளும் நடைபெற்று வசந்த மண்டபத்தில் எழுந்தருளியுள்ள அம்மனுக்கு விசேட பூஜைகள் நடத்தப்பட்டன.

அதனைத்தொடர்ந்து கொடிச்சீலை ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு கொடித்தம்பத்துக்கு அருகில் விசேட பூஜைகள் நடத்தப்பட்டதுடன் வேத, மேள வாத்தியங்கள்,நாதங்கள் முழங்கள அடியார்களின் அரோகரா கோசத்துடன் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.

யாழ்வேலனை பெருங்குளம் முத்துமாரியம்மன் தேவஸ்தான பிரதம குரு சிவாகம கிரியாநிதி,தேவி பூஜாநிரந்தரர்,சிவாச்சாரிய திலகம் சிவஸ்ரீ தியாகராஜ கோகுல சிவாச்சாரியாரினால் இந்த மஹோற்சவம் சிறப்பாக நடத்தப்பட்டது.

10தினங்கள் நடைபெறவுள்ள ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் எதிர்வரும் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை சித்திரத்தேர் பவனி இடம்பெறவுள்ளதுடன் சனிக்கிழமை தீர்த்த உற்சவம் நடைபெறவுள்ளது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .