2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

மனைவி தவறுசெய்தார்: கணவனும் பலியானார்

Gavitha   / 2016 ஜூலை 08 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனைவியொருவர் கணவன் மீது தவறி விழுந்ததில் வயோதிப ஜோடிகள் இருவரும் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் இந்தியா, கலவட் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

68 வயதுடைய பெண், மாடிப்படிக்கட்டில் இருந்து தனது கணவர் மீது வழுக்கி விழுந்ததாலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவர் சுமார் 128 கிலோகிராம் எடையுடைவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஜோடி, வீடொன்றின் கீழ்த்தளத்தில் தங்கிருந்துள்ளனர். மேல் மாடியில் ஜோடியின் மகனும் அவருடையை மனைவியும் வசித்து வந்துள்ளனர்.

சுவாசப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள தனது கணவருக்கு மருந்துகளை எடுப்பதற்காக மருமகளான நிஷா, கீழ்த்தளத்துக்கு வந்துள்ளார். தனது மகனின் உடல் நலம் குறித்த பார்ப்பதற்காக அதிகாலை 4 மணியளவில், இரண்டு ஜோடிகளும் மேல் மாடிக்குச் சென்றுள்ளனர்.

இதன்போது, தனது மனைவின் பின்னே வயோதி கணவரும் சென்றுள்ளார். எனினும் தன்னுடைய பாரத்தால் காலிடறிய பெண், தனது கணவன் மீது வழுக்கி விழுந்துள்ளார்.

இதனால், அவருடைய வயோதிப கணவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டவுடன், மனைவியும் பலத்த காயமடைந்தார்.

அதிர்ச்சியடைந்த மருமகள் இருவரையும் தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதித்த போதும் சிகிச்சை பலனின்றி  இருவரும் உயிரிழந்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X