2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

குவைத் பெண்ணொருவர் தொலைபேசி மூலம் தொந்தரவு செய்வதாக ஆண் புகார்

Kogilavani   / 2011 ஒக்டோபர் 07 , பி.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பெண்ணொருவர் தொடர்ந்து தன்னுடைய தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பு மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பியதாக நபரொருவர் சென்று பொலிஸில் முறைப்பாடு செய்த சம்பவமொன்று குவைத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் தன்னை பலவந்தப்படுத்துவதாக அந்நபர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

அப்பெண் தொலைபேசி அழைப்பினூடாக தந்த தொந்தரவு குறித்து முறைப்பாடு செய்யப் போவதாக தான் எச்சரித்தபின், சிறிது காலம் குறுஞ்செய்திகளை அனுப்புவதை அப்பெண் இடைநிறுத்திக்கொண்டதாகவும் ஆனால் பின்னர் மீண்டும் அவர் பெருந்தொகையான குறுஞ்செய்திகளை அனுப்புவதற்கு ஆரம்பித்ததாகவும்  அந்நபர் தெரிவித்துள்ளார்.

தொலைபேசியினூடாக வெறுப்பூட்டுகின்ற குறுந்தகவல்களை அனுப்பி. அப்பெண் தன்னை தொந்தரவுபடுத்துவதாக அந்நபர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதற்கான ஆதாரமாக அப்பெண் அனுப்பிய சில குறுஞ்செய்திகளையும் அந்நபர் பொலிஸாரிடம் காட்டியுள்ளார்.
 


You May Also Like

  Comments - 0

  • ms Saturday, 08 October 2011 07:01 PM

    காலம் கலி காலம் ஆகிப்போசிடா......
    கற்பு என்பது பிற்போக்கு அல்ல, கவசம் என்றே தெரிஞ்சிக்கனும்...

    Reply : 0       0

    xlntgson Saturday, 08 October 2011 09:03 PM

    குறிப்பிட்ட எண்ணில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை தடுக்கும் வசதி உள்ளது! குறுஞ்செய்திகளுக்குப் பயந்தால் தொடர்பு கொள்ள வேறு வழி தான் என்ன? குறுஞ்செய்திகளை மட்டும் நம்ப இயலாது, அது குரல் அழைப்பாகாவிட்டால்! என்னைப் பொறுத்தவரையில் குரல் அழைப்புகளே பெரும் தொந்தரவுகள், எழுத்தில் வருபவை அல்ல. இப்போது என்னை குறுஞ்செய்தியிலும் தொடர்பு கொள்ள இயலாது, எனது 2 கைத்தொலைபேசிகளும் தொலைந்து விட்டன- ஒரே நேரத்தில் களவு!

    Reply : 0       0

    Akkaraipattu Sunday, 09 October 2011 06:09 AM

    அப்போ அவள் அழகு இல்லையாக்கும் ........
    அவள் அழகு என்றால் இந்த விடயம் வெளியில் வந்திருக்காது .....கச்சிதமாக முடிந்திரிக்கும் எல்லாம் .....!

    Reply : 0       0

    nila Sunday, 09 October 2011 07:14 PM

    அது சரி ..........அக்கரைப்பற்று சூப்பர் கமெண்ட்.

    Reply : 0       0

    reemco Tuesday, 11 October 2011 12:17 AM

    அக்கரைபற்று சொன்னது உண்மையில் சரி.

    Reply : 0       0

    ban Tuesday, 11 October 2011 02:54 PM

    பல ஆண்கள் இந்த நவீன தொழில்நுட்ப காலத்தில இன்னும் முட்டாள்களாகத்தான் இருக்கின்றார்கள். இப்பொழுது பெண் குரலில் ஆண் குரலில் பேசும் மென்பொருள் பல மொபைல் போன்களுக்கு வந்துள்ளன. நானே என் நபர்களை குழப்ப கம்ப்யூட்டர் சாப்ட்வேர் மூலம் பெண் குரலில் கதைத்துள்ளேன். இதை பெருசாக எடுத்துகிட்டு போலிசுக்கு போயுள்ளார். இங்கு விஷயம் என்னவென்றால் இது குவைத் என்பதனால் ஒரு பெரிய செய்தியாகிவிட்டது இவர்களுக்கு பாருங்கோ.

    Reply : 0       0

    AMR RDA Friday, 14 October 2011 05:44 PM

    அட போய்யா நீயும் போயும் போயும் ஒரு ஆம்பிளை என்னு எப்படி சொல்றது?

    Reply : 0       0

    jeffry Saturday, 15 October 2011 07:05 AM

    யாரிடம் கதை விடுகிறான் இவன் ஒரு பெண்ணிடம் இருந்து குறுந்தகவல் வந்ததாம். இவன் போலிசுக்கு சென்று புகார் கொடுத்தானாம் பெண்களுக்காக அளையும் இந்த நாட்டில் இப்படியொரு புகாரம்? நல்லா இருக்குது .....பலே பலே...

    Reply : 0       0

    salfrin Wednesday, 19 October 2011 11:21 PM

    widappaa பெண்ணும் பலவந்தம் செய்யட்டும், செய்து பார்கட்டும்.

    Reply : 0       0

    Fariz Friday, 30 December 2011 04:59 PM

    நீ எல்லாம் ஒரு ஆண் நெனச்சா வெக்கமா இருக்குது

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .