யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள விளக்கமறியல் கைதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நிலையில், அவருடன் ஒரே சிறைக்கூடத்தில் இருந்த ஏனைய 7 பேரையும் அதே கூடத்தில் சுயதனிமைப்படுத்துமாறு, சிறைச்சாலைகள் திணைக்களம் பணித்துள்ளது.
இவர், கடந்த 11ஆம் திகதி கைதுசெய்யப்பட முன்னர் கொண்டிருந்த தொடர்புகள் தொடர்பில் சுகாதாரத் துறையினர் ஆராய்கின்றனர்.
இந்நிலையில், போதைப்பொருள் பாவனையால் மனநிலை பாதிக்கப்பட்ட குறித்த சந்தேகநபருக்கு, ஞாபக சக்திக் குறைபாடு உள்ளமையால்,
தொடர்புகளைக் கண்டறிவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
மானிப்பாய் - சங்குவேலியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர், கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில், மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தால் பாறப்பிக்கப்பட்ட பிடியாணையின் அடிப்படையில், கடந்த 11ஆம் திகதி, மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர்,
நீதிமன்ற உத்தரவுக்கமைய, கடந்த 12ஆம் திகதி முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டடுள்ளார். அவருடன் மேலும் 7 கைதிகள் ஒரே சிறைக்கூடத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அவர்கள் 8 பேருக்கும் நேற்று (21) பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டதில், குறித்த சந்தேக நபருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டது.
சந்தேக நபருக்கு, சாவகச்சேரி நீதிமன்றில் மணநீக்கம் வழக்கு இருப்பதனால், அங்கு சென்றமை தொடர்பிலும் ஆராயப்பட்டு வருகின்றது.
அத்துடன், சந்தேகநபர் மேசன் தொழிலாளிகளுடன் உதவிக்கு செல்வதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.