2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

'பகலில் அதிகம் நீர் பருகுங்கள்'

ஆர்.மகேஸ்வரி   / 2018 ஏப்ரல் 23 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நிலவி வரும் அதிகரித்த  வெப்பநிலை காரணமாக பகல் பொழுதுகளில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை கூடுமானவரை தவிர்த்துக்கொள்ளுமாறு வைத்தியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதிக வெப்பத்தால் சிறுவர்கள் நோய்வாய்படும் நிலை ஏற்படுவதாகவும்,விளையாட்டு வைத்திய அதிகாரி வைத்தியர் லால் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, அதிக வெப்பம் காரணமாக வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 14 இராணுவ வீரர்கள் மயக்கமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனவே, வெப்பத்தால் ஏற்படும் இவ்வாறான அசாதாரண நிலைகளிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு, பகல் பொழுதுகளில் அதிகம் நீர் அருந்துமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .