2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஓய்வுபெறவுள்ள விமானப்படை தளபதி, பிரதமருடன் சந்திப்பு

A.K.M. Ramzy   / 2020 ஒக்டோபர் 30 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேவையிலிருந்து ஓய்வுபெறவுள்ள விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ்  அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவைச் சந்தித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸுக்கும் இடையே நட்பு ரீதியான கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

நாட்டின் பாதுகாப்பு நிலைமை மற்றும் விமானப் படையின் தற்போதைய செயற்பாடுகள் தொடர் பில் இதன்போது விமானப்படை தளபதி எயார் மார்ஷல்

சுமங்கள டயஸினால் பிரதமருக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன், தனது சேவை காலத்தில் வழங்கப்பட்ட ஆதரவு தொடர்பிலும் நன்றி பாராட்டினார்.

17ஆவது விமானப்படை தளபதியாக எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் நாட்டிற்காக ஆற்றிய சேவை தொடர்பில் வாழ்த்து தெரிவித்த பிரதமர், கொவிட்-19 நிலைமைக்கு 

முகங்கொடுப்பதற்கு தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் மற்றும் பிற நடவடிக்கைகளின் மூலம் விமானப்படை இதுவரை செய்த சேவைகளை பாராட்டினார்.

எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் எதிர்வரும் நவம்பர் 2 ஆம் திகதி விமானப்படை தளபதி பதவியிலிருந்து ஓய்வு பெறவுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X