2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ரயில் சேவை இடைநிறுத்தம் !

A.K.M. Ramzy   / 2020 ஒக்டோபர் 30 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதால், ரயில் போக்குவரத்துக்கான கால அட்டவணையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திருத்தப்பட்ட கால அட்டவணை தொடர்பில் ரயில்வே திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, ரம்புக்கனை தொடக்கம் கொழும்பு கோட்டை வரையும், பெலியத்தை, காலி, அளுத்கம மற்றும் களுத்துறை தொடக்கம் மருதானை வரையும் 

அவிசாவளையிலிருந்து கொழும்பு கோட்டை வரையும், சிலாபம் தொடக்கம் கொழும்பு கோட்டை வரையும்   முதலாம் திகதி வரை எவ்வித ரயில்களும் சேவையில் ஈடுபடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், உயர்தரப் பரீட்சையில் தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்கான ரயில்கள் உரிய நேரத்தில் சேவையில் ஈடுபடுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .