2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘கீரியிடம் கோழியை கொடுக்கும் செயல்’

Editorial   / 2018 ஜூன் 13 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.கமல்  

இந்துக் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சராக, நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டுள்ளமை இந்துக்களை நிந்தனை செய்யும் செயலெனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ்,  “இது குறித்து மீளாய்வு செய்யப்பட வேண்டும்” என்றார்.  

சிறிகொத்தாவில் நேற்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

தொடர்ந்து கருத்துரைத்த அவர், “காதர் மஸ்தானுக்கு, பிரதியமைச்சர் பதவியொன்று வழங்கப்பட்டுள்ளது. அதில், இந்துக் கலாசார அலுவல்களும் உள்ளது. பிரதியமைச்சரின்றி, நீண்டகாலம் வெற்றிடமாக இருந்த அமைச்சுகளில் ஒன்று என்ற வகையில் அந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையி​லேயே, இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.  

“எனினும், இது, கோழியைப் பிடித்து கீரியிடம் கொடுக்கும் செயலாகவே அமைந்துள்ளது. தலைமைத்துவங்களால் எடுக்கப்படும் தீர்மானம் என்றாலும் இது இந்துக்களை நிந்திக்கும் செயலாகும்” என்றார்.  

“எனவே, இது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீள் ஆய்வு செய்வாராயின் சிறந்ததாகும். இல்லாவிட்டால் பிரதியமைச்சரும் மக்களும் நெருக்கடிக்கு உள்ளாகுவர்” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .