2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘சர்வதேச விசாரணையே தீர்வு’

Editorial   / 2020 ஓகஸ்ட் 28 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

தமிழ் அரசியல் கைதிகள் மீது சுமத்தப்பட்டுள்ளக் குற்றச்சாட்டுகளுக்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை எனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுமன்னிப்பின் கீழ், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமெனவும் தெரிவித்தார்.

இடைக்கால கணக்கு அறிக்கை மீதான இன்றைய இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர்,  “வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர்ந்தும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அரசாங்கம் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால், அவர்களுக்குச் சர்வதேச விசாரணை ஒன்று தீர்வாக அமையும். இதில் நாம் உறுதியாக இருக்கிறோம். இதற்காகவே மக்கள் எங்களுக்கு வாக்களித்தனர்” எனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .