Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 24, புதன்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 28 , பி.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.நிரோஸ்
நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனால் ஒருபோதும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனைப் போல வரமுடியாதெனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, சிங்கள மக்களைக் குறைத்து மதிப்பிட்டால் அதற்கான விளைவுகளை விக்னேஸ்வரன் சந்திக்க வேண்டி ஏற்படுமெனவும் எச்சரிக்கை விடுத்தார்.
இடைக்கால கணக்கு அறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், நாட்டின் பழைமையான மொழி தமிழ் என்று கூறியிருக்கிறார். இதன்மூலம் தமிழ் மொழிக்குப் பின்னரே சிங்கள மொழி இலங்கைக்கு வந்ததாக அவர் கூறுகிறார்.
சிங்களவர்களுக்கு இந்நாட்டிலுள்ள இடத்தை இல்லாதொழிப்பதற்கு முயலும் எவருக்கும் நாம் தலை வணங்கப்போவதில்லை. பிரபாகரனால் நாட்டைப் பிளவுபடுத்த முடியுமென நினைத்தார். இறுதியில் அவருக்கு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். விக்னேஸ்வரனால் ஒருபோதும் பிரபாகரனாக முடியாது” எனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
6 hours ago
23 Apr 2024
23 Apr 2024