
3ஆவது தடவையாக இடம்பெற்ற ஹலால் எக்ஸ்போ – 2012 கண்காட்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை மற்றும் இன்று திங்கட்கிழமை ஆகிய தினங்களில் கொழும்பு கலதாரி ஹோட்டேலில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இக்கண்காட்சியில் அகில இலங்கை ஜம்இயதுல் உலமா சபையின் ஹலால் பிரிவினால் ஹலால் அங்கீகாரம் வழங்கியுள்ள சுமார் 70க்கு மேற்பட்ட நிறுவனங்களின் காட்சிக்கூடங்கள் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (படங்கள்: நீதி அமைச்சரின் ஊடக பிரிவு)


