Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
கிளிநொச்சி கட்டைக்காடு பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடத்திச் செல்லப்பட்ட பெறுமதி மிக்க முதிரை மரக்குற்றிகள் நேற்று (30) இரவு மீட்கப்பட்டுள்ளதுடன் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, குறித்த மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் மற்றும் வழிகாட்டியாக செயற்பட்ட 2 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .