2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பஸ் விபத்தில் ஐவர் காயம்

Editorial   / 2017 மே 23 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

புத்தளம், மணல்தீவு பிரதேசத்தில் இன்று (23) காலை இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட ஐவர் காயமடைந்துள்ள நிலையில், புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனரென, புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம், கரைத்தீவு பிரதேசத்திலிருந்து புத்தளம் நகரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியாருக்குச் சாந்தமான பஸ்ஸொன்று, மணல்தீவு பிரதேசத்தில் பயணித்துக்கொண்டிருந்த போது வேகக் கட்டுப்பாட்டை இழந்து, பாதையோரத்தில் இருந்த கட்டடமொன்றில் மோதியதில் இவ்விபத்துச் சம்பவித்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் குறித்த பஸ்ஸில் பயணித்த பாடசாலை மாணவர்கள் இருவரும் பொதுமக்கள் மூவரும் காயமடைந்துள்ளனர்.

விபத்துக்குள்ளான தனியார் பஸ், பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், குறித்த பஸ், புத்தளம் பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இவ்விபத்துச் சம்பவம் குறித்து புத்தளம் பொலிஸ் நிலையப் போக்குவரத்துப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .