2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் இருவேறு விபத்துகளில் ஐவர் படுகாயம்

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2017 மே 23 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பில் இடம்பெற்ற இருவேறு விபத்துகளில் ஐவர் படுகாயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காத்தான்குடிப் பிராதான வீதியில் இன்று அதிகாலை வானொன்றும்; இரண்டு மோட்டார் சைக்கிள்களும்  மோதியதில் மூவர்; படுகாயமடைந்துள்ளனர்.

இது இவ்வாறிருக்க, கல்லடிப் பிரதேசத்தில் திங்கட்கிழமை (22)  இரவு இடம்பெற்ற  இருவர்; படுகாயமடைந்துள்ளனர்.

கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து காத்தான்குடி நோக்கி வந்த இலங்கை போக்குவரத்துச் சபை டிப்போவுக்குச் சொந்தமான பஸ்ஸும்  முச்சக்ரவண்டியொன்றும் மோதியே இந்த விபத்துச் சம்பவித்துள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.  

இந்த விபத்துச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .