2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

விபத்தில் இருவர் படுகாயம்

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 28 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

கல்முனை -அக்கரைப்பற்று பிரதான வீதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இரு பெண்கள் படுகாயமடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனையிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற முச்சக்கரவண்டியும் பின்னால் வந்த காரும் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. முச்சக்கரவண்டியில் பயணித்த இரு பெண்களே படுகாயமடைந்துள்ளார்கள்.

இவ்விபத்து தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .