2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

மாணவியை காணவில்லை என முறைப்பாடு

Kogilavani   / 2015 ஓகஸ்ட் 28 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சதிஸ்குமார்

பொகவந்தலாவை, கெர்க்கஸ்வோல்ட் மத்தியப்பிரிவைச் சேர்ந்த 16 வயது மாணவியை, கடந்த ஐந்து நாட்களாக காணவில்லை என மாணவியின் தந்தை பொலிஸில் முறையிட்டுள்ளார்.

மேற்படி பிரிவைச் சேர்ந்த தவராஜ் சர்மிளா என்ற மாணவியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

மேலதிக வகுப்புக்கு  செல்வதாக கூறிச் சென்ற இவர், இதுவரை வீடு திரும்பவில்லை என மாணவியின் தந்தை முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இம்மாணவி தொடர்பில் இதுவரை மூவரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், அவரை கண்டுபிடிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

காணமால் போன மாணவி தொடர்பான தகவல் தெரிந்தவர்கள், அருகிலுள்ள  பொலிஸ் நிலையங்களுக்கு தகவல் வழங்குமாறும் பொகவந்தலாவை பொலிஸார் கோரியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X