2024 மார்ச் 28, வியாழக்கிழமை

விபத்தில் ஒருவர் பலி: மற்றொருவர் வைத்தியசாலையில்

Gavitha   / 2015 ஓகஸ்ட் 28 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். கார்த்திகேசு,வி.சுகிர்தகுமார், பைஷல் இஸ்மாயில்

அக்கரைப்பற்று பொத்துவில் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிலம் குடா சந்தியில் நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை 4 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளதாக  திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு கொட்டஞ்சேனையைச் சேர்ந்த கருணாநிதி ஸ்டீபன் (வயது 18) என்பவரே சம்பவத்தில் பலியாகியுள்ளார். இவருடன் வந்த பரமலிங்கம் மதன் என்பவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

பொத்துவிலிலுள்ள திருமண வீடொன்று சென்று விட்டு, மோட்டார் சைக்கிளில் வந்த இவர்களை, சிறைச்சாலை வாகனம் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

தற்போது உயிரிழந்தவரின் சடலம் திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் விபத்தில் சேதமடைந்த மோட்டார் சைக்கிள், திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவித்த பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X