2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பாரம்பரிய நம்பிக்கையை வென்ற ரத்மல் பேபி சவர்க்காரம் அறிமுகம்

A.P.Mathan   / 2015 ஓகஸ்ட் 29 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

உங்கள் மழலையை கிருமிகளிடமிருந்து முற்றாக பாதுகாக்கும் ரத்மல் பேபி சவர்க்காரம் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பாரம்பரியமாகவே குழந்தைகளை குளிப்பாட்டும்போது கிருமிகளை முற்றாக அழிப்பதற்கு தண்ணீருடன் ரத்மல் கலக்கப்பட்டதுடன் சிறார்களை அந்த தண்ணீரில் குளிப்பாட்டுவதை தாய்மார்கள் வழக்கமாக கொண்டிருந்தனர். கிருமிகளை அழிக்கும் ஆற்றலை ரத்மல் கொண்டிருப்பதாக எமது முன்னோர்கள் அறிந்திருந்தமையே அதற்கு காரணமாகும். 

அந்த பாரம்பரிய அறிவை புதிய தொழில்நுட்பத்துடன் கலந்து ரத்மல் பேபி சவர்க்கார உற்பத்திகளை தயாரித்து விநியோகிப்பது, மருத்துவ தாவரங்கள் தொடர்பாக நீண்டகாலமாகவே ஆய்வுகளில் ஈடுபட்டுவருகின்ற 'நேச்சர்ஸ் சீக்ரட்ஸ் - பென்டாபேபி' உற்பத்திகளை சந்தைக்கு அறிமுகப்படுத்தும் நேச்சர்ஸ் பியூட்டி கிரியேஷன்ஸ் நிறுவனமாகும்.  

இலங்கையில் முதலாவது தனியார் தாவர ஆய்வுகூடத்தை அமைத்த நிறுவனமாக விளங்குகின்ற நேச்சர்ஸ் பியூட்டி கிரியேஷன்ஸ் நிறுவனம், பாரம்பரியமாகவே முன்னெடுக்கப்படுகின்ற மருத்துவ சேர்க்கைகளை புதிய தொழில்நுட்பத்துடன் கலந்து இந்த தயாரிப்புக்களை மேற்கொள்கின்றது.  

அதன் ஒருகட்டமாக சிறுவர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கிருமிகளை அழிப்பதற்கான ரத்மல் பேபி சவர்க்காரத்தை தயாரித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த நேச்சர்ஸ் பியூட்டி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் ஆய்வு மற்றும் அபிவிருத்தி பிரிவின் பணிப்பாளர் கலாநிதி நிமல் புண்யசிறி, 'நீண்டகாலமாகவே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அதன்மூலம் ரத்மல்லில் காணப்படும் கிருமிகளை அழிக்கும் தன்மையானது விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது' என குறிப்பிட்டார்.

அத்துடன் ரத்மல் பேபி சவர்க்காரத்திற்கு சந்தையில் அதிக கேள்வி நிலவுவதாக தெரிவித்த நேச்சர்ஸ் பியூட்டி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் விற்பனை ஆலோசகர் பிரியந்த பெரேரா, மிருக எண்ணெய் அடங்காத ரத்மல் பேபி சவர்க்காரம் இலங்கையில் அறிமுகமாகும் முதலாவது செவ்வரத்தம் சாறு அடங்கிய சவர்க்காரம் என குறிப்பிட்டதுடன் ரத்மல் பேபி கிறீம் உற்பத்திகள் வெகுவிரைவில் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படும் என கூறினார்.  

இது தவிர பென்டா பேபி உற்பத்திகளான, பென்டா பேபி கிறீம், பேபி ஷெம்பூ, பேபி வொஷ் ஆகியவற்றுக்கு அமெரிக்காவின் FDA நிறுவனத்தில் பதிவுசெய்யப்பட்ட நியூயோர்க் நகரிலுள்ள உயர் ஆய்வுகூடத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் மூலம் அந்த உற்பத்திகள் சிறுவர் சருமத்தை பாதுகாப்பதாக உறுதியாகியுள்ளது. இலங்கையில் மேற்கொள்ளப்படுகின்ற சிறுவர்களின் உற்பத்தி பொருளுக்கு சர்வதேசதரம் வாய்ந்த இத்தகைய சான்றிதழ் வழங்கப்பட்ட முதலாவதும் ஒரேசந்தர்ப்பமும் இதுவாகும். 

அமெரிக்காவின் சருமநோய் மற்றும் சிறுவர் நோய் விசேட வைத்தியர் குழுவொன்றினால் இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பென்டா பேபி உற்பத்திகள், சிறார்களின் சருமத்திற்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத அதேவேளை சருமத்தை பாதுகாத்து சருமத்திற்கு முழுமையான போஷாக்கை வழங்குவது இதன்மூலம் உறுதியாகியுள்ளது. 

அத்துடன் உள்ளுர் சந்தையில் காணப்படும், செயற்கை எண்ணெய்கள் மற்றும் சிலிக்கன் அடங்காத சிறார்களுக்கான ஒரே உற்பத்தி பென்டா பேபி தயாரிப்புக்கள் ஆகும். ஆகையால் உங்கள் மழலையின் சருமத்தை மென்மையாக வைத்திருக்கவும், சருமத்திற்கு தீங்கு விளைவிக்காமல் மிக பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கவும் பென்டா பேபி உற்பத்திளை தற்போது இலங்கையிலுள்ள தாய்மார்கள் நம்பிக்கையுடன் தமது மழலைகளுக்காக பயன்படுத்த முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .