2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

'பாரபட்சமின்றி அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படும்'

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 30 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

முஸ்லிம் காங்கிரஸுக்கு கிடைக்கவுள்ள அம்பாறை மாவட்டத்தின் அரசியல் அதிகாரத்தைக் கொண்டு சகல ஊர்களுக்கும் பாரபட்சமின்றி அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படும். இனிவரும் காலம்  அம்பாறை மாவட்ட மக்களுக்கு பொற்காலமாகும் என திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

வாக்களித்த வரிப்பத்தான்சேனை மற்றும் இறக்காமம் பிரதேச மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்கு நேற்றிரவு (29) சென்றபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்து அங்கு அவர் உரையாற்றுகையில்,

'நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் எனது வெற்றிக்கும் கட்சியின் வெற்றிக்கும் வாக்களித்த கட்சிப் போராளிகளுக்கும் மக்களுக்கும் குறிப்பாக, இளைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்.
இத்தேர்தலில் எமது மக்கள் வழங்கிய இந்த அமானிதமான ஆணையினை கொண்டு இப்பிரதேச மக்களின் அபிவிருத்திகள், அபிலாஷைகள் மற்றும் இளைஞர்களின் எதிர்பார்ப்புக்கள் அனைத்தையும் நிறைவேற்ற பாடுபடுவேன்.

அம்பாறை மாவட்டத்தின் அரசியல் அதிகாரம் முஸ்லிம் காங்கிரஸின் கைவசம் கிடைக்கவுள்ளது. இதற்கான வாக்குறுதியினை கட்சியின் தலைமை ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் பெற்றுள்ளது. இதனை பயன்படுத்தி எமது மாவட்டத்தின் அனைத்து ஊர்களிலும் அபிவிருத்தி பணிகள் பாரபட்சமின்றி றே;கொள்ளப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கட்சியின் தலைமையுடம் இணைந்து நாம் மேற்கொண்டு வருகின்றோம்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .