2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மதுபானம் விற்ற இருவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 30 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மண்டூர் கந்தசுவாமி கோவில் மகோற்சவ காலத்தில் அக்கோவிலுக்கு அருகில் மதுபான விற்பனையில் ஈடுபட்டதாகக்  கூறப்படும் இரண்டு பேரை சனிக்கிழமை (29) கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தக் கோவிலை சூழவுள்ள பகுதியில் வெள்ளி (28), சனிக்கிழமைமைகளில் (29) சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, மதுபானப்  போத்தல்களை பதுக்கிவைத்திருந்ததாகக் கூறப்படும்  இவர்களை கைதுசெய்தாகவும் பொலிஸார் கூறினர்.

இந்த சந்தேக நபர்களிடமிருந்து 13 மதுபானப் போத்தல்களையும் 10 பியர் டின்களையும் கைபற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .