2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பிரதமர் மீதான எதிர்ப்பு அதிகரிக்கிறது

Gopikrishna Kanagalingam   / 2015 ஓகஸ்ட் 30 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலேஷியப் பிரதமர் நஜீப் ரஸாக்கால் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் மோசடி தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் ஆர்ப்பாட்டங்களும் எதிர்ப்புகளும் அதிகரித்த வண்ணமுள்ளன.

600 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான தொகையான அரசாங்கப் பணமானது, பிரதமரின் தனிப்பட்ட கணக்கின் கீழ் வைப்புச் செய்யப்பட்டதாக அறிக்கைகள் வெளியானதைத் தொடர்ந்து, பிரதமர் மீதான எதிர்ப்புகள் இடம்பெற்றுவருகின்றன. அவர் பதவி விலக வேண்டுமெனக் கோரும் ஆர்ப்பாட்டங்கள் அண்மைய நாட்களாக அதிகரித்துள்ளன.

இதன் ஓர் அங்கமாக ஆரம்பிக்கப்பட்ட 34 மணிநேரடி ஆர்ப்பாட்டம், நேற்று மாலை முடிவுக்கு வந்தது. மஞ்சள் நிற ஆடைகளை அணிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், சனிக்கிழமை இரவும் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்ட மத்திய கோலாலம்பூரில் தங்கியிருந்து, ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .