2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இந்தியா முன்னிலை

Gopikrishna Kanagalingam   / 2015 ஓகஸ்ட் 30 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின், 3ஆம் நாள் முடிவில், இந்திய அணி ஆதிக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.

கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இடம்பெற்றுவரும் இப்போட்டியில், 8 விக்கெட்டுகளை இழந்து 292 ஓட்டங்களுடன் 3ஆவது நாளை ஆரம்பித்த இந்தியா, சகல விக்கெட்டுகளையும் இழந்து 312 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் செற்றேஸ்வர் புஜாரா ஆட்டமிழக்காமல் 145, அமித் மிஷ்ரா 59 ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில் இலங்கை சார்பாக தம்மிக்க பிரசாத் 4, ரங்கன ஹேரத் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

தனது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 210 ஓட்டங்களையே பெற்றது.

ஒரு கட்டத்தில், 6 விக்கெட்டுகளை இழந்து 47 ஓட்டங்களுடன் இலங்கை தடுமாறியது. எனினும், அறிமுக வீரர் குசால் பெரேராவும் ரங்கன ஹேரத்தும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.
துடுப்பாட்டத்தில் குசால் பெரேரா 55, ரங்கன ஹேரத் 49, தம்மிக்க பிரசாத் 27 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் இஷாந்த் ஷர்மா 5, அமித் மிஷ்ரா, ஸ்டுவேர்ட் பின்னி தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

111 ஓட்டங்களால் முன்னிலை வகித்த நிலையில் தனது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, நேற்றைய நாள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 21 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. விராத் கோலியும் றோகித் ஷர்மாவும் ஆட்டமிழக்காமல் களத்தில் காணப்படுகின்றனர்.

பந்துவீச்சில் நுவான் பிரதீப் 2 விக்கெட்டுகளையும் தம்மிக்க பிரசாத் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதன்படி, 7 விக்கெட்டுகள் கைவசமுள்ள நிலையில், 132 ஓட்டங்களால் இந்தியா முன்னிலை வகிக்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .