2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பூமரத்தடிச்சேனையில் மோதல்; எண்மர் காயம்

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 31 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

திருகோணமலை, வெருகல் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பூமரத்தடிச்சேனைக் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) இரவு இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் காயமடைந்த நான்கு பொலிஸார் உட்பட எட்டுப் பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து காயமடைந்து சிகிச்சை பெற்ற நிலையிலும் பெண்ணொருவரும் அந்தப் பெண்ணின் சகோதரனும் சந்தேகத்தின் அடிப்படையில்  கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

மேற்படி கிராமத்தில் நீண்டகாலமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வோர் தொடர்பில் தகவல் கிடைத்ததை தொடர்ந்து, அவர்களை கைதுசெய்யும் நோக்குடன் தாம் அக்கிராமத்துக்கு சென்றதாகவும் இதன்போது, பொலிஸார் மீது கள்ளச்சாராயம் தயாரித்து விற்பனை செய்வோரும்; அவர்களின் உறவினர்களும் தாக்குதல் மேற்கொண்டனர்.

இதன் பின்னர், சேருநுவர பொலிஸ் நிலையத்திலிருந்து உதவிக்கு வரவழைக்கப்பட்ட பொலிஸார் மீதும் பொலிஸ் வாகனத்தின் மீதும் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வோரும் உறவினர்களும் தாக்குதல் மேற்கொண்டனர்
இந்த நிலையில், குழப்பத்தை கட்டுப்படுத்த இராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டினுள்; கொண்டுவரப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.  

இந்த தாக்குதல் சம்பவத்தின்போது பொலிஸ் வாகனத்துக்கும் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது காயமடைந்த நான்கு பொலிஸார் சேருநுவர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை, பெண்கள் மூவரும் ஆண் ஒருவரும்  வெருகல் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .