2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கள்ளச் சாராயம் விற்பனை செய்த பெண் கைது

Niroshini   / 2015 ஓகஸ்ட் 31 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

சட்டவிரோதமான முறையில் வீட்டில் சாராயம் விற்பனை செய்த குடும்ப பெண்ணொருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த பெண் நீண்ட காலமாக இவ்வாறு சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபட்டு வருவது தொடர்பில் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் அப்பெண்ணை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 180 மில்லி லீற்றர் வடிசாராயத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.  

இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .