2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சந்நிதியானை தரிசிக்கச் சென்றவர்களின் வீட்டில் கொள்ளை

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 31 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

உடுப்பிட்டி, இமையாணன், கேணிக்குளத்தடி பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் ஞாயிற்றுக்கிழமை (30) அதிகாலை நுழைந்துள்ள கொள்ளையர்கள் சிலர், அங்கிருந்த 1 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீட்டில் வசித்தவர்கள், தொண்டைமானாறு செல்வச்சந்தி ஆலய திருவிழாவுக்கு கடந்த 29ஆம் திகதி சென்றிருந்த போதே இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீடு திரும்பிய அவர்கள், தங்களது வீடு கொள்ளையிடப்பட்டுள்ள விடயம் அஙிந்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .