2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சு.க.வின் 64ஆவது மாநாட்டுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 31 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 64ஆவது மாநாடு, செப்டெம்பர் 2ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு பொலன்னறுவை, கதுறுவல பிரதேசத்தில், கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியடைந்து வருவதாக கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எஸ்.டப்ள்யூ.ஆர். டீ. பண்டாரநாயக்கா, கடந்த 1951ஆம் ஆண்டு செப்டெம்பர் 2ஆம் திகதி , ஐக்கிய தேசியக் கட்;சியில் இருந்து விலகி வந்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்மாநாட்டுக்கு, கட்சியின் முன்னாள் தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கட்சியின்  சிரேஷ்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது எனவும் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .