2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தீயால் பதினொரு பேர் மரணம்

Administrator   / 2015 ஓகஸ்ட் 31 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

சவூதி அரேபியாவின் கிழக்கு நகரான கோபாரிலுள்ள வீட்டுத் தொகுதியொன்றில் ஏற்பட்ட தீ காரணமாக, குறைந்தது 11 பேர் மரணமடைந்துள்ளனர். அத்தோடு, 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

குறித்த வீட்டுத்தொகுதியில் கீழ்ப்பகுதியில் ஏற்பட்ட தீ காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளது. சவூதி அரேபியாவின் அரச எண்ணெய் நிறுவனமான சவூதி அரம்கோவுக்குப் பணிபுரியும் ஊழியர்களுக்கான வீட்டுத் தொகுதியே இதுவெனவும், இந்த நிறுவனமே சவூதி அரேபியாவின் பெற்றோலிய உற்பத்தியை மேற்பார்வை செய்கின்றது எனவும் அறிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாகத் தகவல் வெளியிட்டுள்ள உள்விவகார அமைச்சின் சிவில் பாதுகாப்புப் பிரிவு, உயிரிழந்தோர் பல்வேறு நாடுகளையும் சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்தது. எனினும், அதுகுறித்த விபரங்களை அப்பிரிவு வெளியிட்டிருக்கவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .