2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஆட்டோ விபத்தில் பெண் சிசு மரணம்

George   / 2015 செப்டெம்பர் 01 , மு.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருநாகல்-புத்தளம் பிரதான வீதியில் புத்தளத்திலிருந்து குருநாகல் நோக்கிச்சென்ற  ஆட்டோ, வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் ஆட்டோ சாரதி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் காயமடைந்துடன் பெண் சிசு உயிரிழந்துள்ளது.

திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் 2 மாதங்களேயான பெண் சிசு உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகபேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஆட்டோ சாரதியான தந்தை மற்றும் தாய், 2 வயது ஆண் பிள்ளை ஆகியோர் குருநாகல் வைத்தியசாலையில் தொடர்ந்து சிக்சைப் பெற்று வருகின்றனர்.

உயிரிழந்த சிசுவின் சடலம், குருநாகல் வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .