2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கல்கிஸையில் தீ விபத்து

George   / 2015 செப்டெம்பர் 01 , மு.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 459, ரத்மலானை, பெலேக்கடை சந்தியில் உள்ள பூசை பொருட்களை  விற்பனை செய்யும் வியாபார நிலையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகபேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை(01) அதிகாலை 1 மணியளவில்  ஏற்பட்ட இந்த தீ விபத்து தொடர்பில் பொலிஸ் அவசர உதவிபிரிவு இலக்கமான 119க்கு கிடைக்கபெற்ற தகவலையடுத்து தீ விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

தீ விபத்தில் குறித்த வியாபார நிலையத்தின் சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார், பொதுமக்கள், தெஹிவளை- கல்கிஸை தீயணைப்பு பிரிவினர் ஆகியோர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் எதுவென இதுவரை தெரியவரவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .