2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

நடைபாதைக்கு இடைஞ்சல்: குற்றவாளிக்கு ரூ.1000 தண்டம்

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 01 , மு.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, வொக்ஷோல் வீதி பகுதியில் நடைபாதைக்கு இடைஞ்சல் ஏற்படுத்தியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட ஒருவருக்கு, நீதிமன்றம் 1,000 ரூபாய் தண்டம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

நடைபாதையில் மணலைக் கொட்டி, பாதசாரிகளுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தியதாக சந்தேகநபருக்கு எதிராக குற்றச்சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, கோட்டை நீதவானும் மேலதிக மாவட்ட நீதவானுமாகிய பியந்த லியனே மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X