2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

25 நிமிடங்களுக்கு பின்னர் ஹக்கீம் பதவியேற்றார்

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 04 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் ஐக்கிய தேசிய முன்னணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.   

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைலையிலான தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று வெள்ளிக்கிழமை பதவியேற்றுக்கொண்டது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த வைபவம் 12.11க்கு ஆரம்பமானது.
நிகழ்ச்சி நிரலில் பிரகாரம், நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சராக பதவியேற்பதற்காக ரவூப் ஹக்கீம் 13.16க்கு அழைக்கப்பட்டார். அந்த நேரத்தில் அவர் பிரசன்னமாய் இருக்கவில்லை.

எனினும், 13.41க்கு மண்டபத்துக்கு வருகைதந்த அவர், நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .