2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சேயாவின் கொலை விவகாரத்தில் 17 வயது மாணவனுக்கு அநீதி

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 27 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

5 வயது சிறுமி சேயா சந்தவமியின் கொலை விவகாரத்தில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட 17 வயது பாடசாலை மாணவனுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள நாடாளுன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இது பொலிஸாரின் பொறுப்பற்ற செயல் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
 
கொழும்பில் இடம்பெற்ற கலந்துறையாடல் ஒன்றின்போதே அவர் இக்குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொட்டதெனியாவ சிறுமி செயாவை வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்தமையானது எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். இதற்கு அதிகபட்சமாக மரண தண்டணையை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி நீதியமைச்சுக்கு நாம் மகஜர் கையளித்திருக்கின்றோம். 

அவ்வாறே குறித்த கொடூர கொலைச்சம்பவத்துடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தின்பேரில் 17 வயதுடைய மாணவன் கைது செய்யப்பட்டார். குற்றமற்ற குறித்த மாணவனின் மடிக்கணினியில் நீலப்படங்கள் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். எனினும், குறித்த மாணவன் குற்றமற்றவன் என்பது இப்போதைக்கு தெளிவாகியிருக்கிறது. 

பொலிஸாருக்கு சந்தேகத்தின்பேரில் யாரையும் கைது செய்யும் அதிகாரம் இருக்கிறது. இதனை பயன்படுத்தியே ஒரு அப்பாவி மாணவன் கைது செய்யப்பட்டார். குறித்த மாணவன் கைது செய்யப்பட்டமை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. பொலிஸார் பொறுப்பற்ற முறையிலேயே உறுதிப்படுத்தப்படாத அந்த செய்தியை வெளியிட்டனர். 

பொலிஸாரி இந்நடவடிக்கையினால் குறித்த மாணவன் அபகீர்த்திக்குள்ளாகியுள்ளான். மாணவனின் மானம் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது. இதனால் அவனது குடும்பத்துக்கும் இழுக்கு ஏற்பட்டுள்ளது. இதனை பொலிஸார் பொறுப்பேற்க வேண்டும். 

செயாவுக்கு அநியாயமிழைக்கப்பட்டது போன்று குறித்த மாணவனுக்கும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அம்மாணவனுக்கும் அவனது குடும்பத்தாருக்கும் மான நஷ்டஈடு வழங்க வேண்டும். இதனோடு தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அத்துடன், பொலிஸார் ஊடகங்களுக்கு தகவல்களை வழங்கும் போது மிகக்கவனமாக நடந்து கொள்ளவேண்டும். பொலிஸ் சட்டங்கள் தொடர்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .