2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

'தலைவர் சிறந்த செயலாற்றல் உடையவராக இருக்க வேண்டும்'

Niroshini   / 2015 ஒக்டோபர் 06 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

எந்தவொரு நிருவாகமாக இருந்தாலும் அந்த நிருவாகத்தின் தலைவர் சிறந்த செயலாற்றல் உடையவராகவும் அந்த நிருவனத்தின் கீழ் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களிடம் நன்றாக பேசி பழகக் கூடியவாராகவும் இருந்தால் மட்டுமே அந்த நிருவனத்தை மிகத் திறன்பட முன்னெடுத்துச் செல்லமுடியும் என அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமில் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியாலையின் 26ஆவது தொற்றாநோய் சிகிச்சை நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (06) வைத்தியசாலை தொற்றாநோய் பிரிவில் இடம்பெற்றது.

வைத்திய அத்தியட்சகர் டொக்டர் கே.எல்.எம்.நக்பர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றும் டொக்டர் நக்பர் ஒரு சிறந்த திறமைசாலி என்றுதான் என்னால் கூறமுடியும்.

அந்தளவுக்கு அவரின் வேகத்துடன் விவேகமும் அமைந்து காணப்படுகின்றது. ஆயுள்வேத வைத்திய சிகிச்சையில் தொற்றாநோய் கிசிச்சைப் பிரிவு இங்கு அமைக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவது என்பது பாராட்டப்பட வேண்டியவையாகும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .