2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

விபத்தில் படுகாயமடைந்த சாரதி உயிரிழப்பு

Gavitha   / 2015 ஒக்டோபர் 07 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, மல்லாவி, ஒட்டறுத்த குளம் பகுதியில், கடந்த செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி, இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த பஸ் சாரதி, அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், புதன்கிழமை (07) உயிரிழந்துள்ளதாக, மல்லாவி பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் இயங்கிவரும் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுபவர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸின் சாரதியான், தனபாலரட்ணம் தினேஸ் (வயது 23) என்பவரே உயிரிழந்துள்ளார்.

தொழிற்சாலைகளின் பணியாளர்களை ஏற்றிக்கொண்டு, மல்லாவியை நோக்கி சென்ற பஸ்ஸூம் மல்லாவியில் இந்து நட்டாங்கண்டல் பகுதிக்குச் சென்ற பஸ்ஸூம் நேருக்கு நேர் மோதியதால் 38 பேர் படுகாயமடைந்திருந்ததுடன் அவர்கள் அனுராதபுரம் மற்றும் கிளிநொச்சி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .