2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

திருகோணமலை கர்ப்பிணித்தாய்மாருக்கான போஷாக்குணவு இடைநிறுத்தம்

Gavitha   / 2015 ஒக்டோபர் 10 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்,ஏ .எஸ்.எம்.யாசீம்

அரசாங்கத்தினால் கர்ப்பிணித் தாய்மாருக்கு மாதாந்தம் வழங்கப்பட்டு வந்த போசாக்குணவுத்திட்டம்,  திருகோணமலை மாவட்டத்தில் கடந்த ஓகஸ்ட் மாதத்திலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதற்கானஅறிவித்தல் பிரதேச செயலாளர்களால் வழங்கப்பட்டுள்ளது.

இதனுடன் சம்பந்தப்பட்ட அமைச்சு, இதற்கான நிதியை ஒதுக்கீடு செய்யாமையே இதற்கான காரணம் என்று தெரியவருகின்றது. மேலும், பிரதேச செயலகங்கள், கடந்த ஜூன், ஜூலை மாதங்களுக்கான போஷாக்குணவுக்கான கொடுப்பனவுகளை,  பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு இது வரை வழங்கவில்லை என்றும் தெரியவருகின்றது.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X