2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

'பிள்ளைகளுக்கு அடைமொழி வேண்டாம்'

Gavitha   / 2015 ஒக்டோபர் 10 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

எமது பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்லும் போது, 'இவர்கள் முகாம் பிள்ளைகள்' என்று பாடசாலையில் கூறும் அடையாளம் வேண்டாம். அந்த அடைமொழி இல்லாமல் எங்கள் பிள்ளைகள் வாழ்வதற்கு, எங்களை விரைவில் மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என வலிகாமம் வடக்கிலிருந்து மீளக்குடியேறி நலன்புரி முகாமில் வசிக்கும் பெண் தலைமைத்துவக் குடும்பத் தலைவியொருவர் தெரிவித்தார்.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று,  யாழிலுள்ள விருந்தினர் விடுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (09) நடைபெற்றபோதே அந்த பெண் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

'எங்களது பிள்ளைகள் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றாலோ அல்லது ஏதேனும் சிறப்பான சாதனைகள் செய்தாலோ,  யார் இந்தப்பிள்ளை என்று யாரேனும் கேட்டால், அவர்கள் முகாம் பிள்ளைகள் என பாடசாலை சமூகம் அறிமுகம் செய்து வைக்கின்றது.

முகாம் என்ற அடைமொழி எமக்கு வேண்டாம். எங்களது பிள்ளைகள் முகாம்களில் வாழக்கூடாது. அவர்களின் எதிர்காலம் நன்றாக அமைய இந்த அரசாங்கம் எங்களை எமது சொந்த இடங்களில் மீள்குடியேற்ற அனுமதிக்க வேண்டும்' என்றும் அவர் கூறியிருந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .