2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மாணவன் மீது தாக்குதல்: ஆசிரியைக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2015 ஒக்டோபர் 10 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி, ஹபுகல மகா வித்தியாலயத்தில் முதலாம் தரத்தில் பயிலும் மாணவனை கடுமையாக தாக்கியதாககூறப்படும் அந்த வித்தியாலயத்தைச்சேர்ந்த ஆசிரியையொருவரை எதிர்வரும் 12ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு காலி பதில் நீதவான் லலித் பதிரண உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபரான ஆசியையை கைதுசெய்த பொலிஸார், அவரை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்திய போதே அவர் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.

மாணவனின் வைத்திய அறிக்கையை முன்வைக்குமாறும் நீதவான், பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் மனநிலை வைத்தியரை சந்தித்து சிகிச்சை பெற்றுக்கொள்வதற்கு தேவையான ஏற்பாடுகளை சந்தேகநபரான ஆசிரியையைக்கு செய்துகொடுக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X