2024 மார்ச் 28, வியாழக்கிழமை

'நீரால் ஏற்படும் நோயால் 20 செக்கன்களுக்கு ஒரு குழந்தை இறப்பு'

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 27 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

உலகில் தண்ணீரினால் ஏற்படும் நோய் காரணமாக 20 செக்கன்களுக்கு ஒரு குழந்தை இறப்பதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர், வைத்தியர் வைதேகி ஆர்.பிரான்சிஸ் தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்கள் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்வது தொடர்பிலான அறிவூட்டும் நிகழ்வு, மட்டக்களப்பு மாநகரசபையின் ஏற்பாட்டில் நடத்தப்படுகின்றது. இதன் கீழ் மட்டக்களப்பு வின்சன்ட் உயர் தேசிய மகளிர் பாடசாலையில் பிள்ளைகளுக்கு பாதுகாப்பான குடிநீரை உறுதிப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று வெள்ளிக்கிழமை காலை பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் நடத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவர்கள் சுத்தமான குடிநீரைப்பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த விசேட செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய வைத்திய நிபுணர் டாக்டர் வைதேகி ஆர்.பிரான்சிஸ், 'நீரினை சுத்தமான முறையில் பருகாவிட்டால் பல்வேறு தொற்று நோய்களுக்கு உட்படும் நிலைமையேற்படுகின்றது. உலகில் 3.5 மில்லியன் பேர் நீரினால் ஏற்படும் நோயினால் இறக்கின்றனர். ஆபிரிக்க நாடுகளிலேயே அதிகளவான இறப்புகள் ஏற்படுகின்றன.

நீரினால் ஏற்படும் பிரச்சினையின் முக்கியமாக கருதப்படுவது வயிற்றோட்டமாகும். உலகில் பயங்கரவாத தாக்குதல்களினால் இறப்பவர்களை விட இந்த வயிற்றோட்டத்தினால் இறப்பவர்களே அதிகமாகவுள்ளனர்.

இதேபோன்று கொலறா போன்ற நோய்களும் தண்ணீர் தொற்றினால் ஏற்படுகின்றது. 200ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கையில் கொலறா அறிக்கையிடப்படாத நிலையே இருக்கின்றது. எனினும் எமது அண்டை நாடான இந்தியாவின் தமிழ் நாட்டில் இதன் தாக்கம் உள்ளது. இங்கிருந்து அங்கு செல்பவர்கள் ஊடாக அது இங்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X