2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

குடும்பத் தகராரில் தந்தை பலி: மகன் கைது

Kogilavani   / 2015 நவம்பர் 27 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மலர்வேந்தன், பாலித்த ஆரியவங்ச

தனது தந்தையை கத்தியால் வெட்டிக் கொலை செய்ததாக கூறப்படும் 16 வயது சிறுவனை, பதுளை பொலிஸார் நேற்று இரவு கைதுசெய்துள்ளனர்.

இச்சம்பவத்தில், ஹாலிஹெல-உனகொல தோட்டத்தைச் சேர்ந்த ரெங்கசாமி சிவகுமார் என்ற 39 வயது நபரே உயிரிழந்துள்ளார். மேற்படி நபர் நேற்று மாலை மது அருந்திய நிலையில் தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதுடன் கத்தியை கொண்டு தனது மனைவியையும் அச்சுறுத்தியுள்ளார்.

இதனை அவதானித்துகொண்டிருந்த மேற்படி நபரின் மகன்> கத்தியை பறித்து குறித்த நபரை வெட்டியுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .