2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

ஜேர்மனிய தூதுவர்- பிரதி அமைச்சர் ஹரீஸ் சந்திப்பு

Thipaan   / 2015 நவம்பர் 28 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பைஷல் இஸ்மாயில்

இலங்கைக்கான ஜேர்மனிய தூதுவர் கலாநிதி ஜேர்ஹன் மொர்ஹார்ட் மற்றும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோருக்குமிடையிலான சந்திப்பு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் கொழும்பு காரியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை(27) இடம்பெற்றது.

இச்சந்திப்பில் வெளிநாட்டு வர்த்தக முதலீட்டாளர்களுக்கான திட்ட நிபுணர் றிப்தி மொஹமட் மற்றும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் பிரத்தியோக செயலாளர் எச்.எம்.அப்துல் ஹையும் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இச்சந்திப்பின்போது, நாட்டின் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவது தொடர்பாகவும் இத்துறையை அபிவிருத்திசெய்ய ஜேர்மன் நாட்டின் உதவி தேவைப்படுவதாகவும் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸினால் முன்வைக்கப்பட்டது.

அத்துடன், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் விளையாட்டு மைதானங்களின் அபிவிருத்தி மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு ஜேர்மன் நாட்டு பயிற்றுவிப்பாளர்களைக் கொண்டு பயிற்சியளித்தல் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டன.

அத்துடன் சுனாமி மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட மக்களுக்கான வாழ்வாதார உதவி, இளைஞர்களுக்கு தொழிற் பயிற்சி வழங்குவதல், கடற்றொழிலாளர்களின் வாழ்வாதார மேன்பாடு சம்பந்தமாகவும் பிரதி அமைச்சரினால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டதுடன் அதற்கான நிதிகளை பெற்றுத்தருமாறு ஜேர்மன் நாட்டு உயர்ஸ்தானிகரிடம் பிரதி அமைச்சர் வேண்டுகோள் ஒன்றினையும் முன்வைத்தார்.

வேண்டுகோள்களை ஏற்றுக்கொண்ட தூதுவர், அவற்றை செய்து தருவதாக அமைச்சரிடம் வாக்குறுதியளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X