2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பாரிய கல் விழுந்ததில் வீடு சேதம்

Kogilavani   / 2015 நவம்பர் 30 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குத்தூஸ்

பதுளை, எலதலுவ- ஹபுவத்த பிரதேசத்திலுள்ள வீடொன்றின் மீது,  இன்று(30) காலை பாரிய கல்லொன்று விழுந்ததில் அவ்வீடு முற்றாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த முத்ததையா செல்வதுரை (வயது 60) என்ற நபர்,  உயிராபத்தின்றி தப்பிகொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பதுளையில் நேற்று (29) ஞாயிற்றுக்கிழமை மாலை முதல்  கடும் மழை பெய்து வருவதாகவும் தான் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த போது பாரிய சத்தத்துடன் கல் சரிந்து விழுந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X