2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

உயிர்துறக்க முயன்ற இலங்கை அகதி கைது

Kanagaraj   / 2015 நவம்பர் 30 , பி.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவின் நவ்ரு தடுப்பு முகாமில் தற்கொலை செய்வதற்கு முயன்ற இலங்கையைச் சேர்ந்த அகதியொருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது கைது தொடர்பில் அகதிகள் செயற்பாட்டு நிலையங்கள், கரிசனையை வெளிப்படுத்தியுள்ளன.

30 வயதான குறித்த நபர், தற்கொலை செய்யப் போவதாகத் தெரிவித்து மரமொன்றில் ஏறி, சுமார் 9 மணித்தியாலங்கள், அதில் காணப்பட்டுள்ளார்.

ஏறத்தாழ இரண்டரை வருடங்களாக, நவ்ரு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவரது அகதிக் கோரிக்கை, அண்மையிலேயே நிராகரிக்கப்பட்டிருந்ததாக, தமிழ் அகதிகள் சபை தெரிவிக்கிறது. அதன் காரணமாக அவர், தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என எண்ணப்படுகிறது.

அவர் மரத்தில் காணப்பட்ட போது, கீழே இறங்கி வந்தால், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உதவி கிடைக்குமென தடுப்பு நிலைய அதிகாரிகள் தெரிவித்ததாகவும், அதனைத் தொடர்ந்து அவர் இறங்கி வந்தபோது, அவர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .